Tuesday, November 22, 2011

கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP) - நவம்பர் தினப்பொதுக்கூட்டம்


கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP) அமைப்பின் நவம்பர் தினப்பொதுக்கூடம் 20.11.2011 அன்று மாலை 6 மணிக்கு தொடக்கி இரவு 9 மணி வரை தேனி, பகவதி அம்மன் கோவில் திடலில் நடைபெற்றது.  தோழர்  ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உழைக்கும் மக்கள் போராட்ட கமிட்டியை சேர்ந்த தோழர் வரதராஜ் , மாற்றுக்கருத்து ஆசிரியர் தோழர்.த.சிவகுமார் ,தோழர்.சத்தியமூர்த்தி, கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP)இன் தென்னிந்தியாவிற்கான பொது செயலாளர் தோழர்.அ.ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.  மிகவும் நேர்த்தியோடும் ஒழுங்கோடும் நவம்பர் தினப் பொதுக்கூட்டம்  நடைபெற்றது.  தேனி பகுதி வாழ் உழைக்கும் மக்களுக்கு இந்த கூட்டம் ஒரு புது எழுச்சியை கொடுக்கும் விதமாக சிறப்புற நடைபெற்றது.

Tuesday, November 8, 2011

முதலாளித்துவம் வரலாற்றின் இறுதிநிலையல்ல என்பதை நிரூபிக்கும் உலகளாவிய போராட்டச் சூழலில் சோசலிச சமூக அமைப்பை உருவாக்க நவம்பர் தின உறுதியேற்போம்




சோவியத் யூனியனிலும் பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிச அரசு அமைப்புகள் வீழ்ந்தவுடன் ஃபுக்கியாமா என்ற முதலாளித்துவ சிந்தனையாளர் நூல் ஒன்றினை எழுதினார். அதற்கு அவர் வரலாற்றின் இறுதிநிலை என்று பெயரிட்டார். அதில் அவர் மனிதகுல வரலாற்றின் இறுதிநிலை முதலாளித்துவ ஜனநாயகமே என்று நிறுவ முயன்றார்.

Wednesday, October 12, 2011

உள்ளாட்சித் தேர்தலும் உழைக்கும் மக்கள் கடமையும் -ஓர் அறைகூவல்

ஒவ்வொரு முறை மாநில அளவில் ஆட்சிமாற்றம் ஏற்படும் போதும் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட உடனேயே உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் கூட்டுறவுத் தேர்தல்கள் நடத்தப்படுவது வழக்கமாகிவிட்டது. ஆட்சிமாற்றங்களுக்கு முன்பு உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்துவிட்டால் கூட பெரும்பாலும் தேர்தல்கள் நடத்தப்படுவதில்லை. அடுத்த ஆட்சிமாற்றம் நடந்த பின்னரே அவை நடத்தப்படுகின்றன.

Sunday, August 28, 2011

அன்னா ஹசாரேயின் இயக்கத்திற்கு ஆதரவாக மாணவர் இளைஞர் சமூகத்தை அணிதிரட்டுவோம்

கட்டுப்படுத்த முடியா வண்ணம் பல்கிப்பெருகி வரும் ஊழலை எதிர்த்த அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதம் புதுடெல்லி ராம்லீலா மைதானத்தில் தொடர்ந்து கொண்டுள்ளது. அதற்கு ஆதரவாக நாடு முழுவதும் மக்கள் குறிப்பாக இளைஞர்களும் மாணவர்களும் திரண்டெழுந்து கொண்டுள்ளனர். தனக்கெனஅமைப்பேதுமின்றி ஒரு தனிமனித ராணுவமாகச் செயல்படும் அன்னா ஹசாரேயின் இயக்கம் மக்களின் ஆதரவினைஒருங்குதிரட்டுவதில் பெரிய வெற்றிஎதையும் பெற்றுவிடமுடியாது என்று கருதிய ஆட்சியாளர்கள் நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த வெள்ளையர்களையும் மிஞ்சும் விதத்தில் பல்வேறு தடைகளையும் கட்டுப்பாடுகளையும் அவரது அறவழிப் போராட்டத்திற்கு விதித்தனர். தன்வயப்பட்டசிந்தனையிலேயே மூழ்கிக் கிடக்கும் மக்கள் சக்தி எங்கேஎழுச்சியுடன் அவருக்குப்பின்பலமாக பொங்கி எழப்போகிறது என்ற மக்கள் குறித்த கணிப்பும் அவர்களுக்கு இந்த இயக்கம் குறித்த ஒரு மெத்தனப்போக்கை ஏற்படுத்தியது. இவை அனைத்தையும் பொய்யயன நிரூபித்து இன்று அந்த இயக்கம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. நீறுபூத்த நெருப்பாக மாணவர் இளைஞர் மனங்களில்
கனன்று கொண்டிருந்த அதிருப்தியும் நிலவும் நிலைமைகளின் மீதான உடன்பாடின்மையும் பேருருப் பெற்று இவ்வியக்கத்திற்கான ஆதரவாகப்
பரிணமித்துள்ளது.

Thursday, May 19, 2011

கூலி அடிமைத் தனத்தை முடிவுக்குக் கொண்டுவர உறுதியேற்போம்

மேதினத் தியாகிகளின் கனவை நனவாக்குவோம்

ஒரு நாளைக்கு 16 மணி நேரம் 18 மணி நேரம் என கசக்கிப் பிழியப்பட்ட தொழிலாளிவர்க்கம் 8 மணி நேர வேலை நாளுக்காக போராடி அதனை வென்றெடுத்த தினமே மேதினம். 8 மணி நேர வேலை என்பது ஏதோ போராடிய தொழிலாளரின் மனதில் அப்போது தன்னிச்சையாக உருவானதல்ல. மிருகங்களிலிருந்து வேறுபட்டு மனிதன் ஒரு மனிதனாக வாழ வேண்டுமென்றால் அவனுக்கு 8 மணிநேர வேலை, 8 மணிநேர ஓய்வு, மீதமுள்ள 8 மணி நேரம் சமூக ரீதியான வி­சயங்களில் ஈடுபாடு என்ற வரையறை வேண்டும் என்ற அடிப்படையிலேயே அக்கோரிக்கை வைக்கப்பட்டது. அக்கோரிக்கையை முன்வைத்த போராட்டம் முதன்முதலில் இன்று குபேரபுரி என்று வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் பல தொழில் நகரங்களில் 19 வது நூற்றாண்டின் இடைக்காலத்தில் தோன்றியது.

Wednesday, April 6, 2011

கம்யூனிஸ்ட் வோர்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ) , தமிழ்நாடு - தேர்தல் அறிக்கை

அரசியல் வாதிகள் அதிகாரிகள் போல் ஏழை எளியவர்களையும் ஊழல் மயமாக்கி மக்கள் இயக்கங்களை முடக்கும் வகையில் செயல்படுவோரை முதல் எதிர்களாகப் பாவிப்போம் : முறியடிப்போம்

5 மாநிலங்களுக்கான தேர்தல் அறிவிப்புகள் வெளியிடப் பட்டுள்ளன; அம்மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. அதனையொட்டி ஆளும் மற்றும் எதிர்க் கட்சிகளின் கூட்டணிகள் உருவாகி கூட்டணிக் கட்சிகளிடையே பல்வேறு இழுபறி நிலைகளுக்குப் பின்பு இட ஒதுக்கீடுகளும் முடிவு செய்யப்பட்டுள்ளன. ஆளும் கட்சியான தி.மு.கழகமும் பிரதான எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.க.வும் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இரு தேர்தல் அறிக்கைகளிலுமே பல இலவசத் திட்ட அறிவிப்புகள் உள்ளன. இன்னும் தேர்தல் தேதி நெருங்க நெருங்க இரு கட்சிகளிடமிருந்தும் கூடுதல் இலவசத் திட்ட அறிவிப்புகள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

Friday, March 25, 2011

மார்ச் 23: பகத்சிங் நினைவு தினத்தில் முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டுவர உறுதியேற்போம்

தியாகி பகத்சிங்கின் 80வது நினைவு தினம் நாடெங்கும் மார்ச் 23 அன்று அனுஷ்டிக்கப்பட உள்ளது. அவரது நினைவு நாளில் அவரது வீரமும் தியாகமுமே பெரும்பாலும் நினைவுகூரப் படுகின்றன. மரணத்தைக் கூடத் துச்சமெனக் கருதும் மகத்தான வீரமும், சமூகத்தின் நலனுக்கான முழுமையான அர்ப்பணிப்பை அடிப்படையாகக் கொண்ட தியாக உணர்வும் அதாகவே எவரிடமும் வந்து விடுவதில்லை. மாறாக மகத்தான உண்மைகள் அவர்களை வழிநடத்தும் போதே அவை உருவாகின்றன. பகத்சிங் வி­யத்திலும் அத்தகைய மகத்தானதொரு உண்மையுணர்வே அவரை வழி நடத்தியது.

Saturday, March 12, 2011

சீருடனும் சிறப்புடனும் நடைபெற்ற சி.டபிள்யு.பி . யின் அமைப்பு மாநாடு



கம்யூனிஸ்ட் வொர்க்கர்ஸ் பிளாட்பார்மின்(CWP) அகில இந்திய அமைப்பு மாநாடு நவம்பர் 19, 20, 21ம் தேதிகளில் மதுரையில் நடைபெற்றது. நவம்பர் 19 மற்றும் 20 தேதிகளில் மதுரை கண்ணனேந்தல் ஜி.ஆர். நகர் ஆர்.ஆர். திருமண மண்டபத்தில் அகில இந்திய அளவிலான 49 பங்கேற்பாளர்களைக் கொண்ட உள் அரங்க மாநாடு நடைபெற்றது. நவம்பர் 21 ம் நாள் செல்லூர் கண்ணையா முத்தம்மாள் திருமண மண்டபத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. உள்அரங்கில் நடைபெற்ற மாநாட்டினை தோழர் எஸ்.சங்கர் சிங்கும் தோழர் அ.ஆனந்தனும் தலைமையேற்று நடத்தினர். பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசக் கொடியினைத் தோழர் சங்கர் சிங் ஏற்றினார். அதன்பின் சி.டபிள்யு.பி.யின் அகில இந்திய அமைப்புக் குழுவினால் தயாரிக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு அமைப்பு ரீதியான செயல்பாட்டில் ஈடுபட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ள சூழ்நிலையை விளக்கும் அறிக்கை மீதான விவாதம் நவம்பர் 19ம் நாள் நடைபெற்றது.

Friday, January 21, 2011

தகவல் பலகை அமைத்து உழைக்கும் வர்க்கக் கருத்துக்களைக் கொண்டு செல்வோம் (CWP)



சமுக முன்னேற்றத்தில் கருத்துக்கள் ஆற்றிய பங்கு அளவிடற்கரியது. அனைத்தையுமே அனுபவம் மூலம் அறிந்தே ஒரு மனிதன் தேவைப்படும் விதங்களில் தன்னை மாற்றிக் கொண்டிருந்த போக்கினை கருத்துகள் மாற்றின. அத்தகைய கருத்துக்கள் மூலமே மாபெரும் சமூக மாற்றங்களும் ஏற்பட்டன. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற கருத்துக்களின் உதயமே சமூகத்தின் ஜனநாயக ரீதியிலான மாற்றங்களுக்கு வழிவகுத்தது.

Wednesday, January 12, 2011

கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை அமைப்பு துவக்க கன்வென்சன்



நண்பர்களே!
உணவு தானியங்கள், காய்கறிகள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களின் விண்ணை முட்டும் விலைவாசி; உயர்மட்டத்திலுள்ள ஆளும் வட்டாரங்கள் சொல்வதற்கும் அவர்களின் வாக்குறுதிகளும் மாறாக கிராமப்புறங்கலும் நகர்புறங்களிலும் தொடர்ச்சியாகப் பெருகிவரும் வேலையின்மை; அதிகாரவர்க்கம் , நிர்வாகதுறை, நீதித்துறை என அனைத்துத் துறைகளின் அனைத்து மட்டங்களிலும் முழுவீச்சில் ஊடுருவிப் பரவி யிருக்கும் ஊழல்; சாதரண மக்களால் எட்டிப்பிடிக்க முடியாத உயரத்திற்கு அதிகச்செலவு மிக்கதாய் முழுக்க முழுக்க வியாபாரமாகிப் போன கல்வியும், மருத்துவமும்; சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் செல்லரித்துப்போன கலச்சாரக்கட்டமைப்பும் சீரழிந்து ஒழுக்கமும் நேரமையற்ற போக்குகளும் இவையே இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சமூகத்தின் அவலமான சித்திரம். இவற்றையெல்லாம் சரிசெய்து ஒழுங்குபடுத்தும் அதிகார அமைப்பாகச்செயல்பட வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்களால் வழங்கப்பட்ட அதிகாரத்துடன் உருவாக்கப்பட்ட நாடளுமன்றம் உட்பட பல்வேறு மட்டங்களில் செயல்படும் மக்கள் பிரதிநிதித்துவ அமைப்புகளோ அப்பங்கினை ஆற்றத் தவறி நீண்ட காலமாகி விட்டது. அவை அனைத்தும் தங்களின் சுயலாபத்திற்காகவும் ஆடம்பரமான வாழ்க்கைக்காகவும் பொதுபணத்தைச் சூறையாடும் கொள்ளைக்காரர்களின் அமைப்புகளாக மாறிவிட்டன.

Saturday, January 8, 2011

மாற்றத்திற்கான ஆரம்பம் மதுரையில் - CWP யின் முதல் அமைப்பு மாநாட்டு பொதுக்கூட்டம்



மார்க்சிம் கார்க்கி எழுதிய தாய் காவியத்தின் முதல் அத்தியாயம் தான் நம் கண் முன்னே காட்சியாக விரிகிறது. அந்த நாவலில் வரும் தாயின் வாழ்க்கையானது கிட்டத்தட்ட ஒரு நரகத்தின் வாசலை தான் நமக்கு காட்டும் அந்த அளவிற்கு தொழிலாளிகளின் இரத்தம் முதலாளிகளால் உறிஞ்சப்படும்.அதை போலதான் இன்றும் நம்முடிய வாழ்க்கை பேரவலமாக உள்ளது இந்தியாவை மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றும் அது உலகின் வல்லரசாக உருமாறி வருகிறது என்றும் அது தெற்காசியாவின் மிகப்பெரிய தாதா என்றும் அமெரிக்க அதிபர் திரு. ஒபாமா கூறுகிறார். நம்முடிய பாரதப் பிரதமர் மிகப்பெரிய பொருளாதார மேதை என்று அகிலமெல்லாம் போற்றப்படுகிறார். ஆனாலும் விண்ணைமுட்டும் அளவிற்கு 27 மாடிகள் கொண்ட மிகப்பெரிய பங்களா ஒருவருக்குமாகவும் வெறும் தார்ப்பாயை மட்டும் மேற்கூரையாக கொண்டு வாழக்கூடிய பலகோடி மக்கள் ஒருபுறமாகவும் இந்த இந்தியா இரண்டு கூறுகளாக பிரிந்து கிடக்கின்றது .